பிரமிக்கவைக்கும் பிரமிடு அற்புத அதிசயங்கள்..


1. பிர்பஞ்சத்தில் உள்ள சக்தியை ஈர்த்து தன்னுள் தக்க வைக்கும்அமைப்பு பிரமிடாகும். பிரபஞ்ச சக்தியின் வீச்சும், புவி ஈர்ப்பு விசையும் சேர்ந்த கலவையால் பெறப்படும் ஆற்றல் தான் பிரமிடின் ஆற்றலாகும். பிரமிடுகள் தங்களுக்குள் சக்தியை வெகுவாகக் கொண்டிருக்கின்றன..
பிரமிடு வடிவம் உள்ளேயும், வெளிப்புறத்திலும்கூட தன் ஆற்றலால் தட்பவெப்ப நிலையிலிருந்து பொருட்களுக்கு புத்துணர்ச்சி தருவதை மிக விஞ்ஞானப் பூர்வமான உணரமுடிந்தவை...
 பிரமிடுகளின் கூம்பு வடிவ அமைப்பு, சுற்றுப்புறத்திலிருந்து ஒரு வித மின்காந்த ஆற்றலை உள் வாங்குகிறது
 பிரமிடின் உச்சிப்பகுதி, அந்த ஆற்றலை, பிரமிடின் உள்பகுதியில் ஒரே சீராகப் பரவ வைப்பதுதான் ரகசியம் ..
வடிவமைக்கப்பட்ட வடிவ கணித கனவடிவமான பிரமிட், பிரபஞ்ச சக்தியை ஒன்றுதிரட்டி சேமிக்கும் தன்மையுடையது என்ற உண்மையை, பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னரே, அக்கால எகிப்திய அறிஞர்கள் அறிந்திருந்தனர். எனவே பிரமிடை வடிவமைத்து, பயன்படுத்தினர்
சாதரணமாக கெட்டுப்போகும் பழம், பால் போன்றவை பிரமிடின் உள்ளே கெட்டுப்போகாமல் இருக்கின்றன். காபி, ஒயின், பழச்சாறு போன்றவற்றின் ருசி அதிகமாகின்றது. பிளேடு, கத்தி போன்றவற்றின் கூர்மை மழுங்காமல் இருக்கின்றன. .பதப்படுத்தி காத்தல் ,துர்நாற்றத்தை நீக்கி, அறையின் தூய்மையைக் காக்கின்றது பிரமிட்.
காயங்கள், கட்டிகள், சிராய்ப்புகள் முதலியன விரைவில் குணமடைகின்றன. உடல் பருமனைக் குறைத்து, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றது
ஆஸ்துமா, பல்வலி, தலைவலி, சளித்தொந்திரவு, இரத்த அழுத்தம், மூட்டுவலி, இதயத்துடிப்பு, தூக்கமின்மை போன்றவற்றை குணப்படுத்துகின்றது
கண் சம்பந்தப்பட்ட நோய். ஜீரணக்கோளாறு, தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் இவைகளை குணப்படுத்தி இளமையை அளித்து.சிகிச்சை அளித்தல் பிரமிட் சக்தி!
பிரமிடினுள் தியானம் செய்யும் பொழுது அகவுடல் பிரயாணம் 
மிக எளிதாக நிகழ்கின்றது
வாழ்வின்பூமியின் அடியில் எங்கும் நீர் நிறைந்துள்ளது; ஆனால், நமக்கு தண்ணீர் வேண்டுமானால், ஒரு கிணற்றிலிருந்தோ, குளத்திலிருந்தோ தான் எடுக்க வேண்டியுள்ளது. பிரமிடுகளைப் பற்றிய பல பிரமிப்பானத் தகவல்களை .பிரமிட் தியானத்தினால்  மிகத் தெளிவாக நினைவில் உணரமுடியும் சூட்சுமம் நிறைந்தவை..!
உலகின் கண்டங்களையும் கடல்களையும் சரிபாதியாகப் பிரிக்கும் மெரிடியன் என்ற கோட்டின் மேல் அமைக்கப்பட்டுள்ளன
எப்போதுமே குன்றுள்ள இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் சக்தி இயற்கையாகக் குடிகொண்டிருக்கும். அதற்கு குன்றினுடைய பிரமிடு போன்ற வடிவம் ஒரு காரணம்.
நாமக்கல் மலைக்கோட்டை , திருச்சி மலைக்கோட்டை, திண்டுக்கல் மலைக்கோட்டை போன்றவை சக்தி அதிர்வுகளை தன்னக்த்தே கொண்டு மிளிர்கின்றன..
அனைத்து சமய வழிபாட்டு தலங்களும் பிரமிட் போன்ற ஒரு கூம்பு வடிவமான அமைப்பில் தான் இருக்கும். தஞ்சை பெரிய கோவிலும் , மற்ற ஆலய கோபுரங்களும் பிரபஞ்ச அதிர்வுகளை ஈர்த்து மனத்திற்குப்புத்துணர்வு அளிப்பதில் பெரும்பங்காற்றுகின்றன..!
விழிப்புணர்விடன் நிகழும் அகவுடல் பயணத்தில் பெறப்படும் அறிவின் துணைகொண்டு அக்கால அறிஞர்கள் "பெரிய பிரமிடை கட்டினார்கள். இது நம்மை மிக உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும் சாதனமாக அமைக்கப்பட்ட கருவியாகும்
பிரமிடின் கீழ் அல்லது பிரமிடுக்குள் அமர்ந்து செய்யும் தியானம் 'பிரமிட் தியான'மாகும்
பிரமிடினுள் அமர்ந்து செய்யும் தியானத்தில் சாந்தமான மனநிலையிலிருந்து, மிக உன்னதமான நன்னிலை உணர்வைப் பெறும் அனுபவத் திறனையும் பலர் பெற்றுள்ளனர்.
பிரமிடினுள் அமர்ந்து தியானம் செய்யும் பொழுது, பிரமிட் இல்லாமல் செய்யும் தியானத்தில் பெறும் ஆற்றலைவிட மும்மடங்கு ஆற்றலைப் பெறுகின்றோம்.
பிரமிட் தியானத்தில் தேவையற்ற உணர்ச்சிகளும் எண்ணங்களும் நீங்கி, உடல் முழுவதும் ஒரு ஓய்வு நிலையை அடைந்து, மனம் ஒருநிலைப்பட்டு உள்நோக்கி பயணம் செய்யும் உன்னதமான உணர்வு நிலையைத் தருவதாக உணரலாம்..
தியானத்தின் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு மிக அதிகமன ஆற்றலுள்ள சூழ்நிலையை பிரமிட் உருவாக்குகின்றது
மன அழுத்தம், மனச்சோர்வு இவற்றை நீக்க, பிரமிட் உதவுகின்றது. பிரமிடினுள் செய்யப்பட்ட பல சோதனைகளிலிருந்து  அறிகிறோம்..
இந்த பிரமிட்டுக்குள் இருந்து தியானம் செய்தால் மனதை ஒருமைப்படுத்துவதை பலமடங்கு இலகுவாககுகிறதாம்
பிரபஞ்சத்திலுள்ள சக்திகளுடன் தொடர்புகொள்ள வைக்கிறதால் தான் இது சாத்தியமாகிறது. 
மனிதனின் அதிசய தக்க ஆற்றல் ,அறிவியலுக்கும் ஆட்படாத அதிசயங்கள் பல நூற்றாண்டுகள் கடந்தும் ,இன்னும் பல நுற்றாண்டுகளை கடக்க இருக்கும் அற்புதத்தை உணரவேண்டும்..
கோவையில் பெர்கஸ் பள்ளி வளாகத்தில் பிரமிடு அமைப்பை அமைத்து இராம .அரங்கநாதன் அவர்கள் அதன் சிறப்புகள் பற்றி புத்தகங்கள் எழுதியுள்ளார்.
கோவை பஜனகோல மாருதி ஆலயத்தில் பிரமிடு வடிவ தியான மண்டபம் அமைத்து அதனுள் ஆன்மீக அதிர்வலைகள் சிதறாமல் தியானம் செய்பவருக்கு கிடைக்க ஏற்பாடு செதிருக்கிறார்கள்..
பஜன மாருதி ஆலய வளாகத்தில் பிரமிடு வடிவ தியானமண்டபம்.
பிரமிடின் உட்புற தியான அமைப்பு..
வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் ஈஷா யோக மையத்தில் தியானலிங்கத்தைசுற்றி குகைகள் போன்ற அமைப்பு  அமர்ந்து சின்முத்திரை தாங்கி குறிப்பிட்டநேரம் தியானம் செய்பவருக்கு அதிர்வலைகளை ஏற்படுத்துவதை கண்கூடாக உணர்ந்திருக்கிறோம்..
ரமண மகரிஷி திருவண்ணாமலை பாதாள லிங்கம் சன்னதியில் அமர்ந்து தியானித்த இடத்தையும் , ஞானானந்தகிரி சுவாமிகளும் , அவரது குருவான இரத்னானந்தகிரி சுவாமிகளும் அமர்ந்து தியானித்த சுரங்க அறையில் அமைதியாக  அந்த அதிர்வலைகளை உணரமுடிகிற சூழல் நிலவுவதை அறியமுடிகிறது..
இல்லத்தில் அமர்ந்து தியானிப்பதைவிட ஆலயங்களிலும்
பிரமிட் வடிவ தியானமையங்களிலும் ,மனம் ஒருமைப்படுவதை உணரலாம்..


2. எகிப்திய பிரமிடுகள் குறித்து அவருக்கு எழுந்த ஒரு கேள்வி - பிரமிடுகள் ஏன் அந்தக் குறிப்பிட்ட வடிவில் உள்ளன?
          "1997-ம் ஆண்டு நண்பர்களின் உதவியுடன் எகிப்துக்குப் பயணமானேன்.
பிரம்மாண்டமான பிரமிடுகளைப் பார்த்தேன். அவற்றை நேரில் கண்டதும் மின்னல் போல அதன் பொருள் எனக்கு விளங்கியது. பிரமிடுகள் எழுப்பப்பட்ட
காரணத்தின் சூட்சுமம் புரிந்தது. பரந்த அடிப் பகுதி; மேல் பகுதி அண்டவெளியை நோக்கி உயர்ந்து குவிந்துள்ளது. நான்கு பக்கங்களிலும் வாயில்கள். பிரபஞ்ச சக்தியை ஈர்க்கும் வடிவமே பிரமிட். பிரபஞ்சத்தின்
சக்திகளை ஈர்த்து மனிதனுக்குத் தருவதற்காக எழுந்தவைதான் இந்தப்
பிரமிடுகள் என்று எனக்குத் தெளிவாகியது.''
பிரமிடுகளை நேரில் கண்ட பின்பு அதன் பரிமாணங்கள் அவர் சிந்தனைகளின்
மீது புதிய வெளிச்சத்தை வீசியது. மனிதர்களைக் குறித்து சிந்தித்ததைக் கடந்து, மனிதன் இடம்பெறும் பிரபஞ்சத்தைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினார்.
          ""
உலகம் என்பது என்ன என்ற கேள்வி எழுந்தது. உலகில் என்னுடைய பங்கு என்ன என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. பிரமிட்டின் புதிர் விடுபட்டதும் அடுத்த கட்டமாக என் சிந்தனை ஸ்ரீசக்ரத்தின் கோட்டு வடிவங்களின் மேல் தாவியது. இந்தியாவில் நம் முன்னோர்கள் ஸ்ரீசக்ரம் என்ற ஒன்றை உருவாக்கினார்கள். ஸ்ரீசக்ரத்துக்கு நடுவே பிந்து என்கிற மையப் புள்ளி இருக்கும். அதைச் சுற்றியுள்ள முக்கோணங்களுக்கு வெளியே நான்கு வாயில்கள் இருக்கும். வெளிக் கட்டத்துக்கு அப்பால் உள்ளது பிரபஞ்சத்தின்
குழப்ப நிலை. மையப்புள்ளி அமைதியைக் குறிக்கும். தியான சிந்தனை மையப்
புள்ளியை நோக்கி இருக்கும் எனப்படுகிறது... பிரமிடுகளின் அளவு, பரிமாணங்கள் ஸ்ரீசக்ரத்தில் உள்ள கணக்குகளோடு ஒத்துப் போவதைக் கண்டேன். ஸ்ரீசக்ரம் என்பது இந்தியாவுக்கான விஷயம் மட்டுமல்ல, இது உலக விஞ்ஞானம். இது ஒரு புளூ பிரிண்ட். கட்டடம் எழுப்புவதற்கான வரைபடம் இந்த ஸ்ரீசக்ரம். எகிப்திய பிரமிடுகள்தான் கட்டடம். இந்தக் கோடுகளிடையே ஒரு கட்டடம் இருக்கக் கூடுமானால், உலகம் என்கிற பெரும் பெüதிகப் பொருளும்கூட இந்தக் கோடுகளில் அடங்க இயலுமே என்பதாக என் சிந்தனை திரும்பியது.'' அவருடைய சிந்தனை ஆராய்ச்சியாக மாறியது. அந்த ஆராய்ச்சியின் பலன்தான் அவர் கண்டெய்திய ஆந்த்ரோ-பயோமெட்ரிக் ஸயன்ஸ். ஆதிகால மனித கணித இயல். அது என்ன ஆந்த்ரோ- பயோமெட்ரிக் ஸயன்ஸ் என்கிற ஆதிகால மனித கணித இயல். இது ஏதாவது புதிய
விஞ்ஞானமா? கேட்டால், நிதானமாகப் பதிலளிக்கிறார்.
""
முதலில் ஒன்றை நான் தெளிவுபடுத்திவிடுகிறேன். நான் உருவாக்கிய புதிய
விஞ்ஞானம் அல்ல இது. இது ஏற்கெனவே இருந்தது. அந்த என்று முள்ள
விஞ்ஞானத்தைச் சுட்டிக்காட்டுபவன் நான், அவ்வளவுதான். இந்த ஆதிமனித கணித இயலின்படி, ஒரு மனிதனின் வாழ்வின் கட்டங்களை பொற்காலம்,
வெள்ளிக் காலம், தாமிரக் காலம், கரி காலம் என வகுத்துப் பார்க்கலாம்
என்பது என் 30 வருட கால ஆராய்ச்சியின் கண்டுபிடிப்பு. எல்லோருடைய வாழ்விலும் பொற்காலம் என ஒரு சிறு காலம் வரலாம். ஆனால், ஆதிமனித கணித இயல் மூலம் அந்தப் பொற்கால சக்தியை நீண்ட கால அளவுக்கு 100 சதவீதம் பலன் காண வைக்க முடியும்சமுதாயத்தில் முக்கியத்துவம்
பெற்றுள்ள அரசியல்வாதியோ, தொழிலதிபரோ இவ்வாறு முழுப்பலன் அடைந்தால் அந்தச் சமுதாயத்துக்கு எப்படிப்பட்ட நன்மைகளைத் தரும்
என்பதை நீங்கள் உணரலாம். மறைந்து இருந்த ஆந்த்ரோ-பயோமெட்ரிக் ஸயன்ஸ் என்கிற ஆதிமனித கணித இயல் என் தேடலில் - ஆய்வில்
கண்டெய்தியதாகும். இது யந்திரம் போன்றதல்ல. மனிதனின் வாழ்வில் கணித வடிவங்கள் மாபெரும் பங்கு வகிக்கின்றன. இந்த விஞ்ஞானத்தில் வண்ணங்களுக்கும் பெரும் பங்கு உண்டு. குறிப்பிட்ட வடிவங்களையும் வண்ணங்களையும் அடிப்படையாகக் கொண்டு நான் சில ஓவியங்களை உருவாக்குகிறேன். ஒவ்வொருவரின் தேவைக்கேற்ற முறையில் உருவாக்கும்
ஓவியம் இது. இந்த ஓவியம் அதிர்வுகளை உருவாக்குகிறது. அது ஒருவரது வாழ்வில் தொடர்ந்து பாசிடிவான, சாதகமான தாக்கத்தை தந்து கொண்டிருக்கும். பொற்காலம் நீண்டிருக்க வேண்டுமானால் அதற்கென பிரத்தியேக வண்ணங்களும் வடிவங்களும் கொண்ட கார்ப்பரேட் பெயிண்டிங்
உருவாக்கப்பட வேண்டும்.
இது பொத்தம் பொதுவாக உருவாகும் மாஸ் ஆர்ட் அல்ல.
ஒருவர் உதவி நாடி என்னை அணுகும்போது அவரது காலத்தின் குறியீடான பிறந்த எண்ணை வைத்து அவரைப் பற்றிய சிந்தனை தொடங்குகிறது. எண்களும் வடிவங்கள்தானே!
 
காஸ்மிக் பெயிண்டிங் எனும் பிரபஞ்ச ஒவியம் ஒருவரிடத்தில் இருந்தால் கரி காலத்தின் தாக்கத்தைக் குறைக்கலாம். இதிலும் ஒவ்வொருவருக்கும் பிரத்யேக வண்ணங்கள், வடிவங்களைக் கொண்டு ஓவியம் உருவாக்கப்பட
வேண்டும். ஒவ்வொருவரின் தேவைக்கு ஏற்ப ஓவிய முறைகளும் மாறும்.
அளவுகளும் மாறும். வெறும் கார்ப்பரேட் ஓவியங்களையும் காஸ்மிக்
ஓவியங்களையும் ஒருவர் வீட்டில் வைப்பதோடு இந்த விஞ்ஞானம் நிற்பதில்லை. கவுன்சலிங் டெக்னிக்குகள் சில உள்ளன. நீண்ட கால
ஆலோசனை வழங்கும் முறையும் இதில் உண்டு. இதெல்லாம் உள்ளடங்கியது தான் ஆதிகால மனித கணித இயல்.
பூமிக்கு அடியில் நீர் ஏற்கெனவே இருக்கிறது. நான் குழல் கிணறு போட்டு நீரை மேலே கொண்டு தருகிறேன். என் பணியின் பங்கு சமுதாயத்துக்கு இந்த விஞ்ஞானத்தைப் பகிர்ந்து அளிப்பதுதான். நான் ஒரு கருவி. நான் புதுசாக ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை. எண்களுக்கும் வடிவங்களுக்கும் எல்லை ஏது?
பிரபஞ்சத்தின் எல்லையைக் கண்டுவிட முடியுமா! குருடன் யானையை விவரித்த கதை போலத்தான்! என் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இது பற்றி புத்தகம் எழுதத் தொடங்கினேன். அது வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால் உலக அளவில் இதை விரிவுபடுத்த வேண்டும்.
தனி மனித வெற்றிக்கு அப்பால், ஒரு நாட்டின் தலைவர் இந்த ஆதிமனித கணித இயல் முறையைப் பின்பற்றினால் அந்த நாடே செழிப்படையும் அல்லவா! ஒரு தேசத் தலைவரின் வெற்றி ஒரு நாட்டின் வெற்றியல்லவா!
இந்த விஞ்ஞானத்தை நான் அடுத்த கட்டத்துக்கு கொண்டுபோகும்விதத்தில்
சிந்திக்கத் தொடங்கியுள்ளேன்.
உலக மக்கள் மேன்மையடைய வேண்டும் என்பதே என் விருப்பம்! உதாரணமாக, இன்று பொருளாதாரத்தில் வல்லரசுகளாக உள்ள அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளின் தலைவர்கள் இந்த ஆதி கணித இயலைப் பயன்படுத்தினார்கள் என்றால் உலகமே நன்மை அடையுமே!'' என்கிறார் இவர். மாய வடிவங்களை ஓயாமல் சிந்தித்து அலசிக் கொண்டிருக்கும் முத்துகிருஷ்ணன் ஒரு விஞ்ஞானியாஇல்லை,
மெய்ஞானியா?


இலவசமாக கிடைக்கும் அற்புதமான பிரபஞ்ச சக்தி பிரபஞ்சம் என்றால் என்ன?இந்த உலகம், மற்றும் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள், கோள்கள் எல்லாம் சேர்ந்ததுதான் இந்த பிரபஞ்சம் ஆகும். கற்பனைக்கெட்டாத விஸ்தாரணம் இந்த பிரபஞ்சம். எளிதாக புரிந்து கொள்ளுவதற்காக ஆகாயத்தை நாம் பிரபஞ்சம் என்று கொள்ளலாம். எல்லா நட்சத்திரங்களையும்,கோள்களையும் தாங்கி இருப்பது வானம் தானே. அந்த ஆகாயம் எவ்வளவு சக்தி மிக்கதாய் இருந்தால்அத்தனை எடையுள்ள நட்சத்திரங்களையும், கோள்களையும் தாங்கி நிற்கும்?அது தான் பிரபஞ்ச சக்தி (Cosmic Energy) எனலாம். கடவுள் என்றும் கூறலாமே. பிரபஞ்ச சக்தி மகத்துவமானது. அபரிதமானது. மேலும் நாம் அதை இலவசமாக பெறலாம். ஆனால்எத்தனை பேர் அந்த பிரபஞ்ச சக்தியை பயன்படுத்துகிறோம்? மிக மிகக்  குறைவான மக்களே பிரபஞ்சசக்தியின் பெருமைகளை அறிந்திருக்கின்றனர்.வெகு சிலரே பிரபஞ்ச சக்தியைப்  பெற்று பயன் பெறுகின்றனர். பிரபஞ்ச சக்தியை பெறுவது எப்படி?தியானம் மூலமே நாம் பிரபஞ்ச சக்தியை உறிஞ்ச முடியும். மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்யும் போது நாம் பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு பெற முடியும். அந்த சக்தியை நாம் உள் வாங்கவும் முடியும். பிரபஞ்ச சக்தியை நாம் உள் வாங்கும் போது நம் உடலில் உள்ள நோய்கள் நீங்கும். மனம்உறுதி பெறும். நினைத்ததை சாதிக்க முடியும். மன உளைச்சல் நீங்கும்.நம் உடலில் ஏழு சக்கரங்கள் உள்ளன. அவை தியானம் பண்ணும் போது திறக்கும். அப்பொழுது பிரபஞ்ச சக்தி நம் உடலில் பாயும். நம் வாழ்க்கை வெற்றிகரமானதாகவும், மகிழ்ச்சிகரமானதாகவும்மாறும். ஆயிரக்கணக்கில் செலவு செய்து வைட்டமின் மருந்து மாத்திரைகளை சாப்பிடுவதற்குப் பதிலாக இலவசமாக கிடைக்கும் பிரபஞ்ச சக்தியை தியானம் மூலம் பெற்று பயன் பெறலாமே?
 

3. எனர்ஜி பிரமிடு வாஸ்து நம் வசிப்பிடமாகிய கட்டிடம் சதுரமாகவோ, செவ்வகமாகவோ இருக்கும். இந்தமுப்பரிமாண அமைப்பானது பூமி, மற்றும் அண்டவெளியில் ஒரு குறிப்பிட்ட வெளியை அடைத்துக் கொண்டு, பூமியோடும், ஆகாயவெளியோடும் நேரடியாகத் தொடர்பு கொள்கிறது.
இதன் காரணமாக நம் வசிப்பிடங்களில் பல்வேறு விதமான சக்தி அலைகள் உருவாகின்றன. அவற்றைப் பற்றி பார்ப்போம். நம்முடைய கட்டிடத்தின் தரைத்தளத்தில் காந்தஅலைசக்தி (magnatic
field or earth energy)
உருவாக்கவேண்டும். உங்கள் வீடு நான்கு திசைகளாகிய வடக்கு, தெற்கு, கிழக்கு,
மேற்கு ஆகிய பூமியின் திசைகளோடு இணக்கமாக அமைந்திருக்கவேண்டும். அதாவது அளவுக்கு சரியாக அமைந்திருந்தால் வாஸ்துபலம் நிறைந்திருக்கும்.
அது திசைகாட்டும் கருவியின் திசையில் இருந்து 10˚ அல்லது 15˚ அளவுக்கும் அதிகமாக விலகியிருந்தால் அது வாஸ்துப்படி தீங்கை ஏற்படுத்தும்.
இத்தகைய திசைமூடம் உள்ள வீடுகளில் வாஸ்துப்படி அறைகளைக் கட்டமுடியாது.
இவ்வீடுகளில் குழப்பம், சண்டை, சச்சரவுகள் ஏற்படும். மங்களகரமான காரியங்கள்
தடைப்பட்டுவிடும். சதுரமும் செவ்வக வடிவமும் அதிகச்சக்திவாய்ந்தஇ செயல்விரைவுடைய
வடிவங்களாகும்.குறிப்பாக சதுரவடிவம் புவிகாந்தக்கோடுகளோடு ஒத்திசைந்து செல்கின்றன. புவிஈர்ப்பு சக்தியும் புவிகாந்தப்புலமும் தடையின்றி ஒழுங்கமைப்போடு பரவுகின்றன. ஆகவே வாஸ்துவில் சதுர அமைப்பு உத்தமமானதாகக் கருதப்படுகிறது.
ஏனென்றால் சதுர அமைப்பில் எட்டுத்திசைகளும் சரியாகவும் நிலையாகவும் அமைகின்றன. சதுரத்தின் பக்கங்கள் மாறாத நிலைத்தன்மை கொண்டிருக்கின்றன. இந்தப்பண்பு பூமித்தத்துவத்தை உள்ளடக்கியதாகும். கட்டிடத்தின் வெளிப்புற வடிவமைப்பானது (முப்பரிமாண அமைப்பு) மெல்லியமின் காந்த அலைதளத்தை உட்புறமாக கவர்ந்து இழுக்கவேண்டும்.
வீட்டின் உள்ளே ஒவ்வொரு மூலையிலும் இந்த அலைகள் (magnetic waves) ஊடுருவி பாய்கிறது.
எனவே வீட்டின் ஒவ்வொரு மூலையும் 90˚ திருப்பம் கொண்டதாக இருக்கவேண்டும். புவிகாந்தப்புலம் கட்டிடத்தின் தரைப்பகுதியில் வடக்குத்திசையில் இருந்து தெற்கு திசையில் சென்று முடிவடைகின்றது. வீட்டின் மையப்பகுதியில் ஆகாய சக்திகள் (உழஅi நநெசபல) இழுக்கப்படுகின்றன. இந்த இரண்டு விதமான சக்திகளும் தென்மேற்கு மூலையில் சேகரமாகின்றன. இந்த சக்திகள் அலைவடிவில் உற்பத்தியாகி கட்டிடத்தின் வடகிழக்கு (ஈசான்யம்)  மையப்பாகம் (பிரம்மஸ்தானம்ää ஆகாயத்தோடு நேரடியாகத் தொடர்புடைய பகுதி) வழியாகக் கடந்து தென்மேற்கு மூலை (கன்னிமூலை) பகுதியில் ஆற்றல் சேகரிக்கப்படுகிறது. அதாவது சக்தியைக் கடத்தும் ஒரு கால்வாய் போல இந்த மூன்று பகுதிகளும் செயல்படுகின்றன. இது கட்டிடத்தின் உள்ளே சக்தி அலைகள் நிலையாகக் கிடைக்கும்படி செய்கிறது. நம் வசிப்பிடங்களில் நுண்ணிய ஒலி அதிர்வுகளின்
தாக்கம் (mild sound vibration) குறைந்த டெசிபல்அளவில் உருவாகின்றது. அதில்தடைகள் இருந்தால்
சரிசெய்யவேண்டும். இதற்கு சிலமாற்றுப்பரிகார முறைகள் தேவைப்படும். வீட்டின் மேற்கூறையில் (ceiling) இருந்து ஆகாயசக்திகள் (cosmic energy) வீட்டின் உள்ளே கீழ்நோக்கி பாய்கிறது. ஆகவே இச்சக்திகள் தடைபடாதவாறு மேற்கூறை அமையவேண்டும். சூரியஒளி காற்று போன்ற பஞ்சபூதசக்திகள் வீட்டில் நேரிடையாக கிடைக்கும்படி வழிசெய்வது அவசியம். பண்டைக்காலத்தில்
இத்தகைய சக்திகள் நேரிடையாக வீட்டில் கிடைக்கும்படி வீட்டின் மையப்பகுதியில் திறந்திருக்கும்படி (முற்றம் என்ற பெயர் கொண்டது) அமைத்தனர். இது தலைகீழாக அமைந்த பிரமிடு போன்று வேலைசெய்யும். இவைகளைப்போன்ற எல்லாவிதமான சக்திஅலைகள், பஞ்சபூதசக்திகள் தடையில்லாமல் வீட்டில் கிடைக்கவேண்டும். இவை கட்டிடங்களின் உள்ளே உயிரோட்டமாகப்
பரவிக்கொண்டேயிருப்பதுதான் எனர்ஜிவாஸ்து தத்துவமாகும்”. அண்டவெளி, பூமியெங்கும் காஸ்மிக் எனர்ஜி, காந்த அலைச்சக்திகள் வியாபித்திருக்கிறது என்று பௌதிகம் கூறுகின்றது. இந்த
சக்தி அலைகள் மனிதன் உட்பட உயிரினங்கள் அனைத்திலும் புற உடம்பைச் சுற்றி (physical body) ஒளிவட்டமாக வியாபித்திருக்கிறது. இது ‘aura’ எனப்படுகிறது. இதே மாதிரி கட்டிடங்களின் உள்ளேயும்,  வெளிப்பகுதியிலும் பஞ்சபூத சக்திகள் காந்த அலைச்சக்திகள் உயிரோட்டமாக இயங்கிக்கொண்டேயிருக்கின்றன. மனிதனுக்கு நோயைக் கண்டுபிடிக்க ஸ்கேன், எக்ஸ்ரே போன்ற கருவிகள் இருப்பதுபோல கட்டிடங்களில்சக்திஓட்டங்களில் குறைகள், தடைகளை கண்டுபிடிக்க பெண்டுலம், லெஹர்ஆண்டனா, செரிஊட்டப்பட்ட டௌசிங்ராடு, பிரிசம் போன்ற கருவிகள் பயன்படுத்தப்படுகிறது. கட்டிடங்களில் உள்ள எல்லாக் குறைகளையும் கண்டுபிடித்து சக்திமிக்க தாமிரத்தால் செய்யப்பட்ட பிரமிடுகளைப் பயன்படுத்தி வாஸ்து குறைகளை சரிசெய்துவிடலாம்.
பிரமிடு வாஸ்து :
கட்டிடத்தில் சக்தி ஓட்டங்களில் உள்ள குறைகளைப் பொறுத்து பிரமிடுகளைப் பயன்படுத்தும் முறைகள் மாறுபடும். தரைதளத்தில் காந்த அலைச்சக்தி குறைவாக இருந்தால் பூமியின் வடகிழக்கு மூலை, மையப்பகுதி (பிரம்மஸ்தானம்) ஆகிய இடங்களில் பிரமிடை வாஸ்து பூஜை செய்து முறைப்படி தொட்டி அமைத்து மூடவேண்டும். வீட்டின் மூலைகளில் (room corners) மின்காந்த அலைகள் தடைபட்டால் ஒவ்வொரு மூலையிலும் பிரமிடு வைக்கவேண்டும்.